103வது பிறந்த நாள் காணும் நீதிக்கட்சியின் கொள்கைகளை எந்நாளும் காப்போம்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: இன்று 103வது பிறந்தநாள் காணும் நீதிக்கட்சியின் கொள்கைகளை எந்தாளும் காப்போம் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:  இன்று நீதிக்கட்சிக்கு 103வது பிறந்தநாள். திராவிட இயக்கங்களின் தாய் நிறுவனமான தென்னிந்திய நல உரிமைச் சங்கம் எனப்படும் நீதிக்கட்சி 1916ம் ஆண்டு நவம்பர் 20ம் நாள் தொடங்கப்பட்டது. வகுப்புவாரி பிரதிநிதித்துவம், சமூகநீதி, கல்வி  வளர்ச்சியை தமிழர்களுக்கு 100 ஆண்டுகளுக்கு முன் கொடுத்த ஆட்சி நீதிக்கட்சியின் ஆட்சி.  திமுக என்பது நீதிக்கட்சியின் நீட்சியே என்றார் பேரறிஞர் அண்ணா. அந்த இயக்கத்தின் கொள்கையை எந்நாளும் காப்போம். நீதிக்கட்சித்  தலைவர்களை வணங்குவோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: