ரஜினி, கமல் இணைப்பு பேச்சு முறிந்த பாலும் திரிந்த தயிரும் இணைந்தால் தயிர் ஆகாது: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தாக்கு

மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நேற்று நடந்த அரசு விழாவில் கலந்து கொள்ள கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வந்தார். அப்போது அவரிடம் ரஜினி, கமல் இணைவது குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், பாலும், மோரும் இணைந்தால் தயிராகும். ரஜினியும், கமலும் முறிந்த பாலும், திரிந்த தயிரும். இணையும் போது தயிர் ஆகாது. இது தான் அவர்களுடைய இணைப்பு. அதிமுக  எப்பொழுதுமே தேர்தலை சந்திக்க தயார்.  எங்களோடு ஒத்த கருத்துடைய கட்சிகள் இணைந்தால் அவர்களுடன் சேர்ந்து தேர்தலை சந்திப்போம். இவ்வாறு அவர் கூறினார். அமைச்சர் கடம்பூர் ராஜூ: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நேற்று அமைச்சர் கடம்பூர் ராஜூ அளித்த பேட்டியில் நடிகர்கள் ரஜினி மற்றும் கமல் இருவரும் சேர்ந்து தேர்தலில் நின்றாலும் அதிமுகவுக்கு எந்த கவலையும் இல்லை  என்று கூறினார்.

Related Stories: