நாகர்கோவில்: குமரி மாவட்டம், சிதறால், வெள்ளாங்கோடு பகுதியை சேந்தவர் சகரியா. இவரது மகன் ராபின்சன். கூலி வேலை செய்து வந்துள்ளார். கடந்த 2013ல் திருவட்டார், இரட்டை தெருவை சேர்ந்த ஈசாக்(54) மற்றும் அவரது குடும்பத்தினர் அறிமுகமாகி உள்ளனர். மேலும் ஈசாக் சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை பத்திரிகை நிருபராக பணியாற்றுவதாகவும், சென்னை உயர்நீதிமன்றத்தில் உதவியாளர் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுவதாகவும், அவர்களை எங்கள் நீதிபதிகள்தான் தேர்வு செய்வாளர்கள் என்று கூறி அதற்கான விண்ணப்ப மனுவை காண்பித்துள்ளார்.