×

மாஜி அமைச்சர் மீதான வழக்கு ரத்து

மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கடந்த 2014ல் ₹2.97 கோடி ஏமாற்றியதாக திண்டுக்கலை சேர்ந்த சபாபதி திண்டுக்கல் ஜேஎம் 2 நீதிமன்றத்தில் தனிநபர் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் ஆஜராக நத்தம்  விஸ்வநாதனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. தன் மீதான குற்றச்சாட்டிற்கு எந்த முகாந்திரமும் இல்லை. எனவே வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று ஐகோர்ட் கிளையில் நத்தம் விஸ்வநாதன் மனு செய்தார். மனுவை நேற்று விசாரித்த  நீதிபதி ஜி.கே.இளந்திரையன், மாஜி அமைச்சர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Tags : Magi minister , Case ,Magi minister ,canceled
× RELATED கேரள மாஜி அமைச்சரிடம் அமலாக்கத்துறை விசாரணை