காதல் விவகாரத்தில் எரிக்கப்பட்ட மகள் பலி தாய் கவலைக்கிடம்

நாகை: நாகை அருகே வாழ்மங்கலம் சிவன்கோயில் தெருவை சேர்ந்தவர் கண்ணன். தச்சுத்தொழிலாளி. இவரது மனைவி உமாமகேஸ்வரி (48). மகள் ஜனனி(17). அதே பகுதியை சேர்ந்த  வாலிபரை காதலித்து 6 மாதங்களுக்கு முன்பு அவருடன்  சென்றார். போலீசில் புகார் செய்ததில் மயிலாடுதுறை காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார். பின்னர் வீடு திரும்பிய ஜனனி மீண்டும் காதலனுடன் திருநள்ளார் சென்றார். அங்கு சென்று மீட்டு வந்த பெற்றோர், காதலனை சந்தித்து பேசக்கூடாது என்று எச்சரிக்கை செய்தனர். எனினும் இருவரும் சந்தித்துள்ளனர். இதனால் ஆத்திரம்  அடைந்து மகள் ஜனனி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த உமாமகேஸ்வரி தானும் தீக்குளித்தார். நாகை அரசு மருத்துவமனையில் இருவரும் சேர்க்கப்பட்டனர். அங்கு நேற்று ஜனனி இறந்தார். தாய் உமாமகேஸ்வரி நிலை  கவலைக்கிடமாக உள்ளது.

Related Stories: