சென்னை: தமிழகத்தில் விரைவில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைமை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களிடம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:நான் டாக்டர் பட்டம் வாங்க 65 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. எனக்காக தொண்டர்கள் காட்டும் அன்பை தமிழக மக்களுக்கும் காட்ட வேண்டும். அந்த அன்பு செயல் வடிவமாக மாறி, தமிழகத்துக்கு பயனுள்ளதாக வேண்டும். ஆட்சிக்கு வந்து செய்வதை போல், அதற்கு முன்பே வேலை வாய்ப்பு, விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தும் பணிகளை செய்வோம்.