கொல்கத்தா: இந்தியா- வங்கதேசம் இடையேயான 2-வது ‘பிங்க்’ பந்து டெஸ்ட் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை மறுநாள் தொடங்குகிறது. இதற்கான பிரத்யேக பந்து தயாரிப்பு பணி உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரில் நடைபெற்றது. சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி பங்கேற்கும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு அதிகரித்துள்ளது. மேலும் முதல் 4 நாட்களுக்கான டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் முழுமையாக விற்றுத்தீர்ந்துவிட்டது. வங்காளதேசம் அணி டெஸ்ட் போட்டியில் விளையாட அந்தஸ்து பெற்றபோது, முதல் போட்டியில் இந்தியாவை எதிர்த்துதான் விளையாடியது. தற்போது முதல் பிங்க் பால் போட்டியிலும் இந்தியாவை எதிர்த்து விளையாடுகிறது. வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த போட்டியை சிறப்பாக நடத்த பிசிசிஐ மற்றும் பெங்கால் கிரிக்கெட் சங்கம் விரும்புகின்றன.