பெரம்பலூர்: பெரம்பலூர் தொகுதியில் பஞ்சப்பட்டி ஏரியை பராமரித்து காவிரி உபரி நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்.பி. பாரிவேந்தர் தெரிவித்துள்ளார். காவிரி உபரி நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜல்சக்தி அமைச்சகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார். பஞ்சப்பட்டி ஏரியில் காவிரி உபரி நீரை சேமித்தால் 30 கிராமங்களுக்கு தண்ணீர் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.