சென்னை: தமிழகம் முழுவதும் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களை சிறப்பு தேர்வு மூலம் உதவி பேராசிரியர்களாக நியமிக்க உயர்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களாக கிட்டத்தட்ட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றுகின்றனர். குறிப்பாக 4 ஆயிரத்து 54 பேர் பணியாற்றுவதாக கூறப்படுகிறது. இவர்களை நிரந்தரப்படுத்த வேண்டும், அவர்களுக்கான ஊதியத்தை யூ.சி.ஜி விதிகளின் படி உயர்த்தி வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் உள்ளது. முக்கியமாக அவர்களில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியார்ப்பவர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் இருக்கின்றன. இந்த சூழலில் அவர்களுக்கான வழிமுறையை உயர்கல்வித்துறை பரிசீலித்து வருவதாக கூறிவந்தது.