டெல்லி: இந்தியா முழுவதும் தேசிய குடிமகள் கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் தெரிவித்தார். அனைவரும் தாம் இந்தியர் என்பதை குடியுரிமை ஆவணங்களுடன் நிரூபிக்க வேண்டும் என கூறினார். ஆவணங்களை தாக்கல் செய்யாதவர்கள் இந்தியர்கள் அல்லாதவர்கள் என்று கருதப்பட்டு முகாம்களுக்கு அனுப்பப்படுவர் எனவும் கூறினார். தேசிய குடிமக்கள் கணக்கெடுப்பை கண்டு இந்தியாவில் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் உறுதியளித்தார்.