சென்னை: மேயர் பதவிக்கு மறைமுகமாக தேர்தல் நடத்த முடிவு எடுக்கவில்லை என முதல்வர் அறிவிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அமைச்சரவை கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கவில்லை என்பதை முதல்வர் அறிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் உயர்த்தி வசூலிக்கப்பட்ட சொத்துவரி, குடிநீர் கட்டணத்தை மக்களுக்கு திருப்பி கொடுக்க வேண்டும் எனவும் கூறினார்.