ஆலந்தூர் : ஆதம்பாக்கத்தில் மனைவியை உயிருடன் எரித்துக் கொன்ற கணவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.ஆதம்பாக்கம் கக்கன் நகர் 5வது தெருவை சேர்ந்தவர் ராஜன் (40). இவரது மனைவி பஞ்சவர்ணம் (35). ராஜன் திருட்டு மற்றும் அடிதடி வழக்கில் கைதாகி சிறைக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். சமீபத்தில் கூட செல்போன் திருட்டு வழக்கில் போலீசார் அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் ஜாமீனில் வெளியே வந்த, ராஜன் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்தார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 13ம் தேதி வழக்கம்போல் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த பஞ்சவர்ணம், வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து, தனது உடலில் ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கணவனை மிரட்டினார்.