சென்னை : எழும்பூரில் உள்ள அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் கோச்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு சார்பில் நேற்று நடந்தது. இதில், போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கலந்து கொண்டு பள்ளி மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்து பேசினார். அப்போது, “குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கு ெசன்னை மாநகர காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வன்முறைக்கு உள்ளாகும் குழந்தைகள் அந்த பாதிப்பு குறித்து தங்கள் பெற்றோர், ஆசிரியர் அல்லது சகோதர, சகோதரியிடம் தெரிவிக்க வேண்டும். மிகவும் அறிமுகமான நெருங்கி பழகிய நபர்களும் கூட பெண் குழந்தைகளிடம் தவறான நோக்கில் தொட்டு பேசுதல், சில்மிசம் செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். அதற்காக எல்லோரையும் சந்தேகப்படவும் வேண்டியதில்லை.