ஆலந்தூர்: சேலத்தை சேர்ந்தவர் கமலேஷ். இவர் தனது தாய், தம்பி ஆகியோருடன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நேற்று காரில் வந்து கொண்டிருந்தனர். டிரைவர் சுந்தரமூர்த்தி என்பவர் காரை ஓட்டி வந்தார். மீனம்பாக்கம் விமான நிலையம் எதிரே மேம்பாலத்தில் வந்தபோது திடீரென காரின் இன்ஜினில் இருந்து புகை வந்தது.உடனே காரை நிறுத்திவிட்டு, அதில் இருந்து அனைவரும் கீழே இறங்கினர்.