சென்னை: மாநிலங்களவையின் 250வது கூட்டத் தொடர், நேற்று முன்தினம் தொடங்கியது. அப்போது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது: 1978, 1984, 1990 ஆகிய ஆண்டுகளில், இந்த அவையின் உறுப்பினராக நான் இடம் பெறுவதற்கு வாய்ப்பு அளித்த திமுக தலைவர் கலைஞருக்கு, எந்நாளும் நான் நன்றிக்கடன் பட்டு இருக்கிறேன்.அதேபோல, நான்காவது முறையாக என்னை இந்த அவைக்கு அனுப்பி இருக்கிற, தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அவையில் என்னை வார்ப்பித்த ஆசான் முரசொலி மாறனையும் நினைவு கூர்கின்றேன். இதற்கு முன்பு 18 ஆண்டுகள் இந்த அவையில் உறுப்பினராக இருந்தபொழுது, சிங்கத்தின் சீற்றத்துடன் முழங்கிய பூபேஷ் குப்தா ஆற்றிய உரைகள் என்னைக் கவர்ந்தன.ஒவ்வொரு நாளும் இந்த அவையின் நடவடிக்கைகள் நிறைவு பெறுகின்ற வரையிலும், அவர் இங்கேதான் இருப்பார். அதேபோன்ற மற்றொரு ஆளுமை பேராசிரியர் என்.ஜி.ரங்கா. இந்த அவையின் உறுப்பினர்களாக இருந்த அடல் பிகாரி வாஜ்பாய், லால் கிஷன் அத்வானி ஆகியோரிடம் பல பாடங்களைக் கற்று இருக்கிறேன்.
ராஜ்ய சபைக்கு அனுப்பிய கலைஞர், முரசொலி மாறன் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி: வைகோ பேச்சு
- முரசோலி மாறன் எம்.கே.ஸ்டாலின்
- எம்.கே.ஸ்டாலின்: வைகோ பேச்சு
- ராஜ்ய சபா
- முரசோலி மாறன்
- கிங்டம் ஹால் கலைஞர்