திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சலுக்கு பலியான மன்னார்குடி பெண் உடலை குடும்பத்தினரிடம் நிர்வாகம் தர மறுத்தது. மாநகராட்சி சார்பில் உடல் தகனம் செய்யப்பட்டது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அண்டோரா தெருவை சேர்ந்தவர் முருகானந்தம். டெய்லர். இவரது மனைவி கலாவதி(47). கடந்த 15 நாட்களுக்கு முன் திருச்சியில் ஒரு திருமண விழாவில் கலந்து கொண்ட கலாவதிக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. கடந்த சில நாட்களாக அவதிப்பட்டு வந்த அவருக்கு, மன்னார்குடி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் பலனில்லை. இதனால் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவ பரிசோதனையில் பன்றி காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் குணமாகவில்லை.
திருச்சி அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சலுக்கு பெண் சாவு குடும்பத்திடம் சடலம் தர மறுப்பு: மாநகராட்சியே தகனம் செய்தது
- பிரேத
- மரணம்
- ஊழல் குடும்பத்தின் பன்றி திரவ மறுப்புக்கு திருச்சி அரசு மருத்துவமனை பெண் இறந்தார்: கார்ப்பரேஷன் மூலம் உருவாக்கம்