திருச்சி: கரூர் கொசுவலை கம்பெனியில் ₹430 கோடி வரி ஏய்ப்பு கண்டு பிடிக்கப்பட்டதை தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் உரிமையாளர் நாளை (21ம் தேதி) திருச்சி வருமானவரித்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு
உள்ளது. கரூர் வெங்கமேடு பகுதியில் வெளிநாடுகளுக்கு கொசுவலை ஏற்றுமதி செய்யும் நிறுவனம் உள்ளது. கரூர் வெண்ணைமலையில் நிறுவனத்தின் தலைமை அலுவலகமும், நாவல்நகர் அருகே பேக்டரியும் இயங்கி வருகிறது. கொசுவலை கம்பெனி அதிபர் வீடு சின்னாண்டாங்கோயில் பகுதியிலும் உள்ளது. இங்கு, திருச்சி, மதுரை, கோவை, கரூர், திருப்பூர் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 30க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் 4 நாட்களாக அதிரடி சோதனை நடத்தினர்.