திருவெறும்பூர்: திருவெறும்பூர் அருகே ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் வீட்டிற்குள் புகுந்த பாம்பை அவரது வீட்டு நாய் கடித்து குதறி கொன்றது. திருச்சி திருவெறும்பூர் அருகே சோழமாதேவி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பெருமாள். ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர். நேற்று மாலை சுமார் 6 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று பெருமாள் வீட்டிற்குள் புகுந்தது. அப்போது பெருமாளும் அவரது மனைவி, மகன் ஆகியோர் கொல்லைப்புறத்தில் இருந்தனர். மகள் மட்டுமே வீட்டிற்குள் இருந்துள்ளார். பாம்பைக் கண்டதும் அலறி அடித்துக் கொண்டு பெருமாளின் மகள் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தார். அப்போது வீட்டிற்குள் பாம்பு நுழைந்திருப்பதை அறிந்த பெருமாளும்,