‘இரும்பு போல்ட் ரஸ்க்’ கலெக்டர் அலுவலகத்தில் இளைஞர் புகார்

கரூர்: கரூாில் வாங்கிய ரஸ்க்கில் இரும்பு போல்ட் இருந்ததையடுத்து இளைஞர் ஒருவர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் புகார் மனு அளித்தார். கரூர் மாவட்டம் ஜெகதாபி ஊராட்சி பொரணியை சேர்ந்த விவேகானந்தன் என்ற இளைஞர் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தார். குறைதீர் நாள் கூட்டத்தில் மனு அளித்து விட்டு வந்த அவர், தான் வாங்கிய ரஸ்க்கில் இரும்பு போல்ட் இருந்தது.

இது குறித்து கலெக்டரிடம் புகார் அளித்ததாக கூறினார். மேலும் அவர் கூறுகையில், கரூர் பேருந்து நிலையத்தில் ரஸ்க் வாங்கியதாவும் அதில் ஒரு துண்டு ரஸ்க்கில் இரும்பு போல்ட் இருப்பதை பார்த்து அதுகுறித்து மனு கொடுத்தேன். சிறு குழந்தைகள் தெரியாமல் சாப்பிட்டால் என்ன ஆகும். நான் கண்டு பிடித்ததால் இங்கு வந்து தெரிவித்தேன். இதுபோல் இனி நடக்காதவாறு உரிய நடவடிக்கை எடுக்க முறையிட்டதாகவும் விவேகானந்தன் கூறினார்.

Related Stories: