சென்னை: இலங்கையில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கோத்தபய ராஜபக்சே அனைவருக்குமான அதிபராக செயல்பட வேண்டும் என்று சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேட்டியளித்துள்ளார். தமிழகத்தின் மேம்பாட்டிற்காக நானும், ரஜினியும் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்றால் பயணிப்போம் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். படிக்காதவர்களுக்கு வழங்கும் முதல் கவுரவ டாகடர் பட்டம் எனக்கு வழங்கப்பட்டதில் மகிழ்ச்சி என்றும் கூறியுள்ளார்.