×

காஷ்மீர் விவகாரத்தால் நிறுத்தப்பட்ட இந்தியாவுடனான தபால் சேவைகள் மீண்டும் தொடக்கம்: பாகிஸ்தான் ஊடகங்கள் தகவல்

இஸ்லாமாபாத்: காஷ்மீர் விவகாரத்தால் நிறுத்தப்பட்ட இந்தியாவுடனான தபால் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியா பாகிஸ்தான் இடையே பல்வேறு பிரச்சினைகள் நிலவி வருகின்றன. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லைப்பகுதியில் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அதற்கு தகுந்த வகையில் இந்தியாவும் பதிலடி கொடுத்து வருகிறது. இதற்கிடையே ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்த ஆகஸ்டு மாதம் ரத்து செய்த மத்திய அரசு, ஜம்மு-காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து அறிவித்தது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்த ஆகஸ்டு மாதம் ரத்து செய்தது. இதற்கு கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான், இந்தியாவுடனான வர்த்தக உறவை முறித்துக் கொள்வதாக அறிவித்தது.

அத்துடன் டெல்லியில் உள்ள தங்கள் நாட்டு தூதரை திரும்ப அழைக்கவும், இந்திய தூதரை திருப்பி அனுப்பவும் செய்தது. இந்தியா-பாகிஸ்தான் இடையே இயக்கப்படும் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தையும் நிறுத்தியது. வாகா எல்லையை மூடியது. அதுமட்டுமல்லாது, ஆகஸ்டு மாதம் முதல் இந்தியாவுடனான தபால் மற்றும் வான்வெளி சேவைகளையும் பாகிஸ்தான் நிறுத்தியது. இந்நிலையில், இந்தியாவுடன் தபால் சேவைகளை மீண்டும் தொடங்கி கடிதங்களை வழங்குவதற்கான தடையை நீக்கியுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேநேரம் இந்தியாவில் இருந்து வரும் பார்சல் சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. முன்னதாக, எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் பாகிஸ்தான், தபால் துறையின் கடிதங்களை இந்தியாவுக்கு அனுப்புவதை நிறுத்திவிட்டது. பாகிஸ்தானின் இந்த முடிவு சர்வதேச அஞ்சல் தொழிற்சங்க விதிமுறைகளுக்கு முரணானது என பாகிஸ்தானின் செயலுக்கு இந்தியா கண்டனம் கடும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



Tags : Pakistani ,India ,Kashmir , Kashmir, India, Postal Services, Pakistan, Media
× RELATED காஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்குப்...