மதுரை: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை மருத்துவ மாணவர் தந்தையின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மருத்துவ மாணவரின் தந்தை சரவணனின் ஜாமீன் மனுவை மதுரை உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்தது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக ஆதாரம் இல்லாத நிலையில் கைது நடவடிக்கை எடுத்ததாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.