பீஜிங்: சீனாவின் சாங்ஷி மாகாணத்தில் உள்ள பியாங்கோ கவுண்டியில் நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வருகிறது. நேற்று அந்த சுரங்கத்தில் 35 தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென நிலக்கரி சுரங்க வாயு கசிந்து வெடிவிபத்து ஏற்பட்டது.. சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 15 பேர் பலியாகினர். 9 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து உள்ளூர் அதிகாரிகள் தரப்பில் செவ்வாய்க்கிழமை கூறும்போது, சீனாவின் வடக்கில் உள்ள ஷான்சி மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கும்போது ஏற்பட்ட திடீர் விபத்தில் 15 பேர் பலியாகினர். 9 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.