சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் பெண் பக்தரை தாக்கிய தீட்சிதரை கைது செய்யக்கோரி சார்-ஆட்சியர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் மனு அளித்துள்ளது. வழக்கு பதிவு செய்த பிறகும் காவல்துறை இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகார் மனுவில் குற்றச்சாட்டப்பட்டுள்ளது. தீட்சிதரை கைது செய்யாவிட்டால் விரைவில் அனைத்து தரப்பினரையும் திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.