ஸ்ரீஹரிகோட்டா: 509 கிலோ மீட்டர் உயர சுற்றுவட்ட பாதையில் செலுத்தப்படும் கார்ட்டோசாட்- 3 செயற்கை கோள் பூமியையும், பூமியில் உள்ள ஒவ்வொரு பொருளையும் அதிதுல்லியமாக படம் பிடிக்க கூடியதாகும். எதிரிகளின் ராணுவ நிலைகளையும், பதுங்கு குழிகளையும், தீவிரவாதிகளின் மறைவிடங்களையும் ஜூம் செய்து படம் பிடிக்கும் திறன் கொண்டது. இது தவிர அமெரிக்காவின் 13 நானோ செயற்கை கோள்களும் பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் வரும் 25ம் தேதி விண்ணில் செலுத்தப்படுகின்றன. இவை தொடர்ந்து, டிசம்பரில் Risat-2BR1 செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி சி-48 ராக்கெட் மூலமும், Risat-2BR2 செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி சி-49 ராக்கெட் மூலமும் விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த இரு செயற்கை கோள்களும் ராணுவ கண்காணிப்பை வலுப்படுத்த உதவும். மேகமூட்டமாக இருந்தாலும், இரவு நேரங்களிலும் ஊடுருவி படம் படிக்கும் திறன் கொண்ட கருவிகள் இதில் இடம்பெறுகின்றன.