சென்னை: உயர்கல்வித்துறை சார்பில் பல்வேறு மாவட்டங்களில் 90.91 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை சென்னை தலைமை செயலகத்திலிருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். நாகை மாவட்டம் சீர்காழியில் உள்ள எம்.ஜி.ஆர் கலை கல்லூரியில் 7 கோடி 97 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கல்விசார் மற்றும் நிர்வாகக் கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். உயர்க்கல்வித்துறை சார்பில் சென்னை, திருவள்ளூர், திருப்பூர், கோவை, சேலம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 82.94 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கல்லூரி கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.