சென்னை: பெண்கள், குழந்தைகளுக்கான குற்றங்கள் குறித்த விழுப்புணர்வு நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் நடைபெற்றது. இதில் பெருநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் பங்கேற்று உரையாற்றினார். அதில் இந்தியாவிலேயே குழந்தைகளுக்கு பாதுகாப்பான நகரமாக சென்னை விளங்குகிறது எனவும், குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க பொதுமக்கள் மற்றும் காவல்துறையின் நடவடிக்கையே காரணம் எனவும் குறிப்பிட்டார். மேலும் குழந்தைகளுக்கு பாதுக்கான சூழல் உருவாக்குவதற்கு அரசாங்கம் மிகப்பெரிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. தமிழக முதலமைச்சர் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் விதமாக சிறப்பு பிரிவு ஒன்றினை ஏற்படுத்தி சென்னை பெருநகரத்தில் அவர்களுக்கு கீழ் அனைத்து மகளிர் காவல் நிலையங்களும் கொண்டுவரப்பட்டு பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதற்கு முயற்சி எடுத்துள்ளார்.