இன்று உலக கழிப்பறை தினம்.!

நவம்பர் 19

2001 நவம்பர் 19-ம் தேதி Jack Sim என்பவரால் உலக கழிப்பறை அமைப்பு (World Toilet Organization) நிறுவப்பட்டது. 2013 ஆம் ஆண்டு ஐ.நா.பொதுச் சபையில் 122 நாடுகளின் ஆதரவோடு, இந்த அமைப்பு நிறுவப்பட்ட தினத்தை சர்வதேச கழிப்பறை தினமாக அனுசரிப்பது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 19-ம் தேதியன்று சர்வதேச கழிப்பறை தினமாக  (World Toilet Day) கடைபிடிக்கப்பட்டு வருகிறது.  

2030-ம் ஆண்டிற்குள் உலகிலுள்ள அனைவருக்கும் சுகாதாரமான கழிப்பறை வசதிகள் கிடைப்பதற்கு, நிலையான வளர்ச்சி இலக்குகளை தீர்மானித்து அதை செயல்படுத்துவது, கழிவறைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரை சரியான முறையில் சுத்திகரிப்பு மற்றும் மறுசுழற்சி செய்து, பாதுகாப்பாக வேறுவகையில் மறுபயன்பாட்டுக்கு உட்படுத்துவது போன்றவற்றை முக்கிய நோக்கங்களாகக் கொண்டு இந்த சிறப்பு தினம்

அனுசரிக்கப்படுகிறது.

சர்வதேச அளவில் 400 கோடி மக்களுக்குக் கழிப்பறை போன்ற பிற அடிப்படை சுகாதார வசதிகள் இல்லை. உலகில் 3-ல் ஒருவருக்கு சுத்தமான, பாதுகாப்பான கழிப்பறை வசதி இல்லை. சுகாதார சீர்கேடுகளால் ஒவ்வொரு நாளும் 1000 குழந்தைகள் வரை மரணமடைகின்றனர் என்கிறது ஒரு புள்ளிவிவரம்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கழிப்பறை சார்ந்த சுகாதாரம் முக்கிய பங்காற்றுகிறது. பணியிடத்தில் கழிப்பறையும் சுகாதாரமும் இல்லாமல் இருப்பது ஊழியர்களுக்கு வசதியின்மையையும் அசௌகரியத்தையும் ஏற்படுத்துகிறது. இதனால் பணியாளர்களின் வருகை விகிதம், ஆரோக்கியம், மன ஒருமைப்பாடு மற்றும் நிறுவனத்தின் உற்பத்தித் திறனிலும் பாதிப்பு ஏற்படுகிறது.

பணியிடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் மக்களின் உடல்நலம், பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தைப் பேணும் வகையில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக சுகாதாரமான கழிப்பறை வசதிகள்  இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

மனிதக் கழிவுகளை அகற்றும் முறைஉடல் கழிவுகளை பாதுகாப்பான முறையில், சுற்றுச்சூழல் நலம் குறித்த பொறுப்புணர்வோடு நாம் ஒவ்வொரு வரும் அகற்ற வேண்டியது அவசியம்.

* உடல் கழிவுகளை மூடப்பட்ட ஆழமான தொட்டி அல்லது குழிக்குள், மனிதர்களோடு நெருங்கிய தொடர்பில்லாதவாறு, சற்று ஒதுக்குப்புறமாக அமைத்து, சரியான முறையில் சேகரிக்க வேண்டும்.

* சேகரிக்கப்பட்ட அந்தக் கழிவுகளை அதற்குரிய இயந்திரங்களின் உதவியோடு சரியான முறையில் அப்புறப்படுத்த  வேண்டும்.

* அப்புறப்படுத்திய கழிவினை பாதுகாப்பான முறையில் மறுசுழற்சி செய்து உரம் மற்றும் மின்சாரம் தயாரிப்பிற்குப்  பயன்படுத்தலாம்.  

திறந்த வெளியில் மலம், சிறுநீர் கழிக்கும் பழக்கத்தைத் தடுத்து நிறுத்துவதோடு, சுகாதாரமான முறையில்  கழிப்பறைகளைப் பயன்படுத்த அனைவரையும் ஊக்கப்படுத்த வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு கழிப்பறையை உருவாக்க வேண்டும். மக்கள் கூடும் அனைத்து பொது இடங்களிலும் சுகாதாரமான பொதுக் கழிப்பறை வசதிகளை  ஏற்படுத்துவதோடு, அவற்றை சுகாதாரமான முறையில் பராமரிக்க நாம் ஒவ்வொருவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியது  அவசியம்.

Related Stories: