×

தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்களை நேரில் தொடங்கி வைக்கிறார் முதல்வா் எடப்பாடி பழனிசாமி

சென்னை: தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் தொடக்கி வைக்கவுள்ளார். இதற்கான தேதிகள் மற்றும் நேரங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. அதன்படி தென்காசி மாவட்டத்தை வரும் 22-ஆம் தேதி காலை 9.30 மணிக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை வரும் 27-ஆம் தேதி காலை 10.45 மணிக்கும், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களை வரும் 28-ஆம் தேதி காலையிலும் முதல்வர் பழனிசாமி தொடக்கி வைக்கிறார். இதைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டத்தை வரும் 29-ஆம் தேதி நண்பகல் 12.15 மணியளவில் தொடக்கி வைக்கிறார்.

Tags : districts ,Edavadi Palanisamy ,Tamil Nadu , Edappadi Palanisamy, Chief Minister of Tamil Nadu, District
× RELATED தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் இரவு 7...