டெல்லி: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவுத் தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.