×

சிம் கார்டு வாங்கிய வழக்கு ஈரோடு கோர்ட்டில் மாவோயிஸ்ட் ஆஜர்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் போலி ஆவணங்கள் கொடுத்து சிம் கார்டுகளை  பெற்று முறைகேடு செய்ததாக மாவோயிஸ்ட் ரூபேஷை கேரள மாநில போலீசார் கைது  செய்து, திருச்சூர் சிறையில் அடைத்தனர்.  இந்த வழக்கு விசாரணைக்காக  மாவோயிஸ்ட் ரூபேஷை கேரள போலீசார்  நேற்று ஈரோடு ஒருங்கிணைந்த கோர்ட்  வளாகத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் அவரை ஈரோடு மாவட்ட முதன்மை  நீதிமன்றத்தில், நீதிபதி உமா மகேஸ்வரி முன் ஆஜர்படுத்தினர். மாவோயிஸ்ட் ரூபேஷை டிசம்பர் 2ம் தேதி மீண்டும் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் அவரை சிறையில் அடைக்க அழைத்து சென்றனர்.



Tags : Erode ,Maoist Azar ,Erode Court , SIM Card, Erode, Court, Maoist
× RELATED தகிக்கும் கோடை வெயில் பறவைகளுக்கு...