மதுரை: மருத்துவக்கல்லூரிகளில் சேர்வதற்கான நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் உதித்சூர்யா பிடிபட்டார். இதைத் தொடர்ந்து உதித்சூர்யா, அவரது தந்தை வெங்கடேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஜாமீன் வழங்கக் கோரி வெங்கடேசன், ஐகோர்ட் மதுரை கிளையில் மீண்டும் மனு செய்தார். இம் மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல் ராபின்சன் ஆஜராகி, ‘‘ முக்கிய குற்றவாளி இன்னும் கைதாகவில்லை. விசாரணை துவக்க கட்டத்தில்தான் உள்ளது. எனவே, ஜாமீன் வழங்கக் கூடாது‘‘ என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘‘இந்த நிலையில் ஜாமீன் வழங்க முடியாது’’ என்றார்.