உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் பா.ஜ. போட்டியிடும் : பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

நெல்லை: நெல்லையில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நேற்று அளித்த பேட்டி: வரும் உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ. அனைத்து பகுதிகளிலும் போட்டியிடும். அதிக இடங்களில் போட்டியிடும். 2011ல் பா.ஜ. தனித்துப் போட்டியிட்டு 2 நகராட்சிகளை பிடித்தது. அதிமுகவுடன் கூட்டணி தொடருவது குறித்து கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும்.

தமிழகத்தில் ஒரு வெற்றிடம் இருக்கிறது என்று ரஜினிகாந்த் கூறிய கருத்து உண்மைதான். எம்ஜிஆர், ஜெயலலிதா, கலைஞர் ஆகியோருக்கு பிறகு அவர்களுக்கு நிகரான தலைவர்கள் இல்லை என்பது நிதர்சனமான உண்மை. ரஜினிகாந்த் பா.ஜ.வுக்கு வருவாரா? என்பது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும். தமிழக பா.ஜ. தலைவர் குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும் என்றார்.

Related Stories: