மோடி அரசு கடைபிடிக்கும் கொள்கையால், பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளதை காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்த வேண்டும் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார். மத்திய அரசு கடந்த 16ம் தேதி கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற பின் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான குலாம் நபி ஆசாத் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது 18ம் தேதி தொடங்க உள்ள நாடாளுமன்றம் கூட்டத்தொடரில் பங்கேற்க, சிறையில் உள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.