புதுடெல்லி: கலாபானி எங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதி என்று கூறியுள்ள நேபாள பிரதமர், அங்கிருந்து இந்திய ராணுவம் வெளியேற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். காஷ்மீரை இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்து கடந்த அக்டோபர் 31ம் தேதி மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து மத்திய அரசு புதிய இந்திய வரைபடத்தையும் வெளியிட்டிருந்தது. அதில் சீனா, பாகிஸ்தான் நாடுகள் ஆக்ரமித்துள்ள காஷ்மீர் பகுதிகள் அனைத்தும் இந்தியாவுக்கு சொந்தமானது என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்தியா, நேபாளம், திபெத் மூன்று நாடுகள் சந்திக்கும் எல்லைப் பகுதியை உத்தரகாண்ட் மாநிலத்துக்குள் குறிப்பிடப்பட்டு இருப்பது கண்டனத்துகுரியது என நேபாளம் தெரிவித்திருந்தது.