திருச்சி: திருச்சியில் இரண்டாம் நிலை பெண் காவலர்களுக்கான உடல் தகுதி தேர்வுக்கு வந்த 5 கர்ப்பிணிகள் நிராகரிக்கப்பட்டனர். தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் பெண்களுக்கான காவலர் தேர்வு திருச்சி சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் நேற்று துவங்கியது. 700 பெண்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. இதில் 634பேர் கலந்து கொண்டனர். திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன், பெரம்பலூர் எஸ்பி நிஷாபார்த்திபன் ஆகியோர் மேற்பார்வையில் தேர்வு நடத்தப்பட்டது. இதில் தேர்வுக்கு 5 கர்ப்பிணிகள் வந்திருந்தனர். அவர்களிடம் விசாரித்த அதிகாரிகள், அவர்கள் தேர்வுக்கு தகுதியற்றவர்கள் என நிராகரித்தனர்.