ஐயுசி கட்டண விவகாரம் இந்த மாதத்துக்குள் தீர்வு

புதுடெல்லி: ஐயுசி கட்டண விவகாரம் தொடர்பாக இந்த மாத இறுதிக்குள் முடிவு எடுக்கப்படும் என டிராய் தெரிவித்துள்ளது.மொபைல் வாடிக்கையாளர்கள் தங்கள் பேக்கேஜ்களுக்கு ஏற்ப இலவச அழைப்புகளை மேற்கொள்கின்றனர். இந்நிலையில், முதல் முறையாக, குரல் அழைப்புகளுக்கு நிமிடத்துக்கு 6 காசு வசூலிக்கப்படும் என ஜியோ அறிவித்துள்ளது. நிறுவனங்களுக்கு இடையே பயன்பாட்டு கட்டணமாக (ஐயுசி) டிராய் நிமிடத்துக்கு 6 காசு வசூலிப்பதால், இந்த கட்டணம்  வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்படுகிறது என ஜியோ கூறியது.

 இதுகுறிதது டிராய் அதிகாரி ஒருவர் கூறுகையில், ஐயுசி பிரச்னைக்கு இந்த மாத இறுதிக்குள் தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. இதுதொடர்பான தனது முடிவை அப்போது டிராய் தெரிவிக்கும். சமீபத்தில் தொலைத்தொடர்பு நிறுவன பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், ஐயுசி கட்டண முறையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான கெடுவை அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதிக்கு மேல் நீட்டிக்கலாமா என்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது என்றார்.

Related Stories: