ரியோ டி ஜெனிரோ: பிபா யு-17 உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் பைனலில் மெக்சிகோவை வீழ்த்திய பிரேசில் அணி 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.பிரேசிலில் நடைபெற்ற இந்த தொடரில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, இத்தாலி, ஈகுவடார், கொரியா உட்பட 24 நாடுகள் பங்கேற்றன. முதல் அரையிறுதியில் பிரேசில் 3-1 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது. மற்றொரு அரை இறுதியில் நெதர்லாந்து - மெக்சிகோ 1-1 என டிரா செய்ததை தொடர்ந்து பெனால்டி ஷூட் அவுட் கடைப்பிடிக்கப்பட்டது. அதில் மெக்சிகோ 4-3 என்ற கோல் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.பெசாரோ நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்த பைனலில் பிரேசில் - மெக்சிகோ அணிகள் மோதின. முதல் பாதியில் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. இடைவேளைக்குப் பிறகு தொடர்ந்த ஆட்டத்தின் 66வது நிமிடத்தில் மெக்சிகோ வீரர் புகா கடத்தி தந்த பந்தை கோன்சாலெஸ் வலைக்குள் திணித்து பிரேசிலுக்கு அதிர்ச்சி அளித்தார்.