அண்ணாநகர்: சென்னை ஐசிஎப் ஜி பிளாக் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சாலமன் (25). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அசோக் (19), தீனா (19) மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட சிறுவன் ஆகிய மூவருக்கும் இடையே, கடந்த 13ம் தேதி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வீட்டின் முன் நிறுத்தியிருந்த சாலமன் பைக்கை அசோக், தீனா மற்றும் சிறுவன் ஆகியோர் தீ வைத்து எரித்துள்ளனர். இதுகுறித்து சாலமன் கொடுத்த புகாரின்படி, ஐசிஎப் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஐசிஎப் பகுதியில் பதுங்கி இருந்த சிறுவன் மற்றும் அசோக், தீனா ஆகியோரை நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.