×

தாம்பரத்தில் அமைந்துள்ள சுரங்கப்பாதையை நீட்டிக்க வேண்டும்: மத்திய அமைச்சரிடம் டி.ஆர்.பாலு கோரிக்கை

சென்னை: தாம்பரம் ரயில்வே சுரங்கப்பாதையை நீட்டிக்க வேண்டும், என்று  மத்திய அமைச்சருக்கு திமுக எம்பி டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார். மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு, திமுக எம்பி டி.ஆர்.பாலு நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தாம்பரம் ரயில் நிலையம் அருகே ரயில்வே துறையினர் அமைத்துள்ள சுரங்கப்பாதை, என்.எச்.45 நெடுஞ்சாலையின் கிழக்கு பகுதியில் முடிவு பெறுவதால், சாலையை கடக்கவும், மேற்கு தாம்பரம் செல்வதற்கும் பயனற்றதாக இருக்கிறது என்று  தாம்பரம் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, ரயில்வே சுரங்கப்பாதையை என்.எச் 45 நெடுஞ்சாலையின் குறுக்கே நீட்டித்து தர வேண்டும். மேலும் சுரங்கப்பாதையை பயன்படுத்தும் கிழக்கு தாம்பரம் மக்கள் என்.எச் 45 சாலையின் மேற்கு பகுதியை அடையுமாறு செய்தால் மிகவும்  பயனுள்ளதாக இருக்கும். ரயில்வே சுரங்கப்பாதை கிழக்கு தாம்பரம் பகுதியில் இருந்து மேற்கு தாம்பரம் பகுதிக்கு நீட்டிக்கப்பட்டால், சாலை விபத்துக்கள் பெருமளவில் குறைந்துவிடும். மேலும் தற்போதுள்ள ரயில்வே சுரங்கப்பாைதையை பயன்படுத்துவோர்  எண்ணிக்கையும் அதிகரிக்கும். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.



Tags : tunnel ,Baloo ,Tambaram ,Union Minister , Located , Tambaram, tunnel, TR Palu's
× RELATED ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திட்ட...