சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் முதியவர் கைது

பெரம்பூர்: கொடுங்கையூர் எருக்கஞ்சேரி தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (69).  இவர், தனது வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் தம்பதியின் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.  இதுகுறித்து எம்கேபி நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சிறுமியின் தாய் புகார் அளித்தார்.அதன்பேரில் போலீசார் நேற்று முன்தினம் ஜெயபிரகாஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: