×

திருமணமான பிறகு பேஸ்புக்கில் நட்பு: உல்லாசமாக இருக்க மறுத்த பெண்ணின் ஆபாச படத்தை வெளியிடுவதாக மிரட்டல்... வாலிபர் சிறையில் அடைப்பு

காளஹஸ்தி: கல்லூரியில் படித்தபோது காதலை ஏற்க மறுத்த பெண்ணுடன் பேஸ்புக்கில் நண்பனாக பழகிய வாலிபர், தன்னுடன் உல்லாசமாக இருக்காவிட்டால் ஆபாச படங்களை வெளியிடுவேன் என மிரட்டினார். அவரை அவரது தந்தையே பிடித்து போலீசில் ஒப்படைத்தார். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் போன்பல்லி கிராமத்தை சேர்ந்தவர் பரத்(35). இவர் கல்லூரியில் படிக்கும்போது தன்னுடன் அதே கல்லூரியில் படித்த ஒரு மாணவியை காதலித்துள்ளார். ஆனால் இவரது காதலை அந்த மாணவி ஏற்றுக்கொள்ளவில்லையாம். இந்நிலையில் அப்பெண்ணிற்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இதையடுத்து அவர் காளஹஸ்தியில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். பரத்துக்கு இன்னும் திருமணமாகவில்லை. இந்நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு பரத், பேஸ்புக்கில் அப்பெண்ணிற்கு ஃபிரண்ட் ரிக்வஸ்ட் கொடுத்துள்ளார். அப்போது முதல் இருவரும் சமூக வலைத்தளத்தில் நண்பர்களாக பழகியுள்ளனர். இவ்வாறு நட்பாக பழகிய நிலையில் பரத், தன்னுடன் நெருங்கி பழக வேண்டும், உல்லாசமாக இருக்க வேண்டும். இல்லையேல் ஆபாசப் படங்களை பேஸ்புக்கில் வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் இளம்பெண் அதிர்ச்சி அடைந்து எச்சரித்துள்ளார்.

ஆனால் இதை கண்டுகொள்ளாத பரத் கடந்த 4 மாதங்களாக இளம்பெண்ணை தொடர்ந்து மிரட்டி வந்தாராம். இதனால் வேதனை அடைந்த இளம்பெண் தனது கணவருக்கு தெரிவித்தார். அவரது ஆலோசனைப்படி காளஹஸ்தி 2வது நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே போலீசார் விசாரிக்கும் தகவலை தெரிந்துகொண்ட பரத் தலைமறைவாகினர். இதனையடுத்து போலீசார் பரத்தின் வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அவரது தந்தை பரத்தை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசாரிடம் ஒப்படைத்தார். இதனையடுத்து போலீசார் பரத்தை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி காளஹஸ்தி சிறையில் அடைத்தனர்.

Tags : women ,UNICEF , Facebook, girl, intimidator, juvenile prison
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...