பண்ருட்டி: பண்ருட்டி செட்டிப்பட்டறை ஏரியில் 300க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2ஆண்டுகளுக்கு முன்பு நீதிமன்றம் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமப்பை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது. இதன்பேரில் வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் முன்னிலையில் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள அனைத்து வீடுகளும் ஜேசிபி மூலம் இடிக்கப்பட்டது. இதனால் இப்பகுதி மக்கள் மாற்று இடம் வேண்டி மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் வருவாய் துறையினரிடம் மனு அளித்தனர். ஆனால் 2ஆண்டுகள் கடந்தும் இதுவரை மாற்று இடம் வழங்கப்படவில்லை. இதுகுறித்த இப்பகுதி மக்கள் கூறுகையில் பண்ருட்டி- லிங் ரோடு விரிவுப்படுத்துவதற் காகவும், அரசு மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்காகவும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு லிங் ரோட்டில் வசித்த வந்த 300க்கு மேற்பட்ட குடும்பங்களை வருவாய் துறையினர் மற்றும் நகராட்சியினர் அப்புறப்படுத்தி மாற்று இடமாக செட்டிபட்டறை ஏரியில் குடி அமர்த்தினர். அதன் பிறகு அனைத்து அடிப்படை வசதிகளையும் அமைத்து கொடுத்தனர். இதனை தொடர்ந்து கடந்த 35 ஆண்டுகளாக செட்டிபட்டறை ஏரியில் வசித்து வந்தோம்.