டெல்லியில் ஜே.என்.யு மாணவர்கள் போராட்டம் காரணமாக 3 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்

டெல்லி: டெல்லியில் ஜே.என்.யு மாணவர்கள் போராட்டம் காரணமாக எல்லோ லைன் வழித்தடத்தில் செயல்படும் 3 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. உத்யாக்பவன், படேல் சவுக், மத்திய தலைமை செயலக மெட்ரோ ரயில் நிலையங்களில் நுழைவு மற்றும் வெளியே செல்லும் வாயில்கள் மூடப்பட்டுள்ளது. டெல்லியில் தற்காலிகமாக மூடப்பட்ட 3 மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறக்கப்படும் நேரம் குறித்து ஏதும் தகவல் தெரிவிக்கப்படவில்லை.

Related Stories: