டெல்லி: மாநிலங்களவையின் 250-வது கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் பேசினார். அப்போது சிறந்த நிதி அமைச்சராக செயல்பட்டவர்கள் மாநிலங்களவையில் இருந்துதான் வந்துள்ளனர் என மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜியை குறிப்பிட்டு பேசினார். மாநிலங்களவைக்கு உரிய அங்கீகாரம் வழங்கினால் தான் உண்மையான ஜனநாயகம் வளரும் எனவும் கூறியுள்ளார்.