சென்னையில் நடைபெறும் 17-வது சர்வதேச திரைப்பட விழா: தமிழக அரசு சார்பில் ரூ.75 லட்சம் நிதி

சென்னை: சென்னை திரைப்பட விழாவிற்கு தமிழக அரசு சார்பில் ரூ.75 லட்சம் நிதியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் நடத்தப்படும் விழாவுக்கு தமிழக அரசு சார்பில் இந்த ஆண்டு ரூ.75 நிதி வழங்கப்பட்டுள்ளது.  17-வது சர்வதேச திரைப்பட விழா சென்னையில் டிசம்பர் மாதம் 12-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இவ்விழாவினை தமிழக அரசின் ஆதரவுடன் இந்திய திரைப்பட திறனாய்வு கழகம் நடத்த இருக்கிறது.

இவ்விழாவிற்காக தமிழக அரசின் சார்பில் 75 லட்சம் ரூபாய்கான காசோலையை சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மனோபாலா, பூர்ணிமா பாக்கியராஜ், மோகன் உள்ளிட்டோரிடம் வழங்கினார். அப்போது செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ உடனிருந்தார். சென்னையில் 2012 முதல் 2017 வரை நடந்த சென்னை சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு தமிழக அரசு சார்பில் 50 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. இதை, 75 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க, முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். இந்த உத்தரவின் படி ரூ.75 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: