கோயில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கும் அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் விசாரணை நிறைவு

சென்னை: கோயில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கும் அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றத்தில் விசாரணை முடிந்தது. அரசு, புறம்போக்கு மற்றும் கோயில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என்று ஆக. 30-ல் அரசாணை வெளியிடப்பட்டது. தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து ராதாகிருஷ்னன் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். சட்டவிரோதமாக நிலங்களை ஆக்கிரமிப்பவர்களுக்கு உதவும் வகையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மனுவில் குற்றச்சாட்டு கூறப்பட்டது.

Related Stories: