×

மாணவர் முகேஷ் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக மற்றொருவரை போலீஸ் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

சென்னை: சென்னை அருகே மாணவர் முகேஷ் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக மற்றொருவரை போலீஸ் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. முகேஷ் கொலை தொடர்பாக தேடப்பட்டு வந்த செல்வம் தேனி மாவட்டம் லட்சுமிபுரம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். செல்வத்தை தாழம்பூருக்கு அழைத்து வந்த போலீஸ் அவரை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். முகேஷ் கொலை தொடர்பாக செல்வத்தை போலீஸ் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க செங்கல்பட்டு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.


Tags : court ,murder ,Mukesh ,student , Student Mukesh, police, court clearance
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...