உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களை அளிக்கலாம்: கே.எஸ்.அழகிரி

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களை நவம்பர் 21, 22, 23 தேதிகளில் அளிக்கலாம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்தார். மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் மனுவுடன் ரூ.10,000 நன்கொடை தர வேண்டும் என தெரிவித்தார். மாநகராட்சி வார்டு உறுப்பினர் ரூ.3000, நகராட்சி தலைவர் ரூ.5000 வார்டு உறுப்பினர் ரூ.2000, பேரூராட்சி தலைவர் ரூ.3000 தர வேண்டும் என கூறினார். பேரூராட்சி வார்டு உறுப்பினர் ரூ.1000, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ரூ.3000, ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் ரூ.2000 தர வேண்டும் என கூறினார்.

Related Stories: