டெல்லி: மாநிலங்களவை இந்திய நாட்டின் பன்முகத்தன்மையை பிரதிபலிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அறிஞர்கள் பலர் மாநிலங்களவையில் ஆற்றியுள்ள உரைகளால் அரசுக்கு நல்ல யோசனைகள் கிடைத்துள்ளன. குறிப்பாக மாநிலங்களவையில் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆற்றியுள்ள உரைகள் நினைவு கூரத்தக்கவை. மாநிலங்களவையில் வரலாற்று சிறப்பு மிக்க பல சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. நாட்டை முன்னேற்றுவதில் மாநிலங்களவை எப்போதும் முக்கிய பங்காற்றி வருகிறது என மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேசினார்.